தூதரக விதிமுறைகளை மதிக்காத பாகிஸ்தான்.. இந்திய தூதரர்களை திருப்பியனுப்புவதில் குறி
டெல்லி: தூதரக விதிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது பாகிஸ்தான். 8 அதிகாரிகளை திருப்பியனுப்ப நெருக்கடி கொடுத்துள்ளதன் மூலம், இரு நாட்டு உறவுக்குள்ளும் சிக்கலை உருவாக்கியுள்ளது அந்த நாடு.
இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான ஒப்பந்தப்படி, இரு நாடுகளும், தலா, 110 தூதர அதிகாரிகளை நியமித்துக்கொள்ள முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்த எண்ணிக்கை 50-ஆக குறைக்கப்பட்டது. இரு நாடுகள் நடுவே பதற்றம் தொடர்ந்ததால் இந்த எண்ணிக்கை 20-ஆக, மேலும் குறைக்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 18 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் தூதரக விதிமுறைகள் அனைத்தையும் உடைத்து எறிந்து இந்திய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்ப தொடங்கியுள்ளது. அதுவும் வெளிப்படையாகவே இது தெரிகிறது.
டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகபூப் அக்தர், உளவு புகாரை தொடர்ந்து திருப்பியனுப்பப்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு இந்திய அதிகாரிகளை திருப்பியனுப்பி வருகிறது பாகிஸ்தான். அதன் ஒரு பகுதிதான், 8 இந்திய அதிகாரிகளை உளவு புகாரின்பேரில் திருப்பியனுப்ப நெருக்கடி கொடுத்து வருகிறது பாகிஸ்தான். இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications