நானோவுக்கு "டாட்டா"..?.. வாங்க ஆள் இல்லை.. ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தியானதால் பரபரப்பு!
Recommended Video

டெல்லி: பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது டாடா நிறுவனத்தின் நானோ கார் வந்தபோது. ஆனால் வந்த வேகத்தில் அது காணாமல் போய் விட்டது. காரணம், கார் குறித்த எதிர்பார்ப்புக்கு மாறாக அதன் செயல்பாடுகளும், விலையும் இருந்ததால்.
ஒரு லட்சம் ரூபாயில் கார் என்பதுதான் நானோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ரத்தன் டாடா சொன்ன உத்தரவாதம். ஆனால் விலை கூடுதலாகவே இருந்தது. இப்போது மேலும் எகிறி விட்டது. வசதிகளும் கூட திருப்தி தருவதாக இல்லை. உடல் பருமன், உயரமானவர்களுக்கு நானோ பொருத்தமான காரும் இல்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் காருக்கான கிராக்கி குறைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் நானோ காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதை விட முக்கியமாக டீலர்கள், புக்கிங்கை நிறுத்தி விட்டனர் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை டாடா நிறுவனம் வெளியிடவில்லை.

ஒரு கார் மட்டுமே உற்பத்தி
ஆனால் சனந்த் பேக்டரியில் கடந்த மாதம் ஒரே ஒரு கார்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாம். இதை வைத்துப் பார்க்கும்போது நானோவை நிறுத்த டாடா முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.

இறங்கிப் போன நானோ மோகம்
10 வருடங்களாக இந்திய சாலைகளை அலங்கரித்துக் கொண்டுள்ளது நானோ. உலகின் விலை மலிவான கார் என்பதுதான் இதன் புகழுக்குக் காரணம். ஆனால் அதன் பொலிவு படு வேகத்தில் இறங்கிப் போய் விட்டது. தற்போது யாரும் நானோவை விரும்புவதில்லை.

கார் உற்பத்தி நிறுத்தம்
டாடா மோட்டார்ஸின் நானோ கார்கள் சனந்த் ஆலையில்தான் உற்பத்தியாகின்றன. அங்கு தற்போது உற்பத்தி கிட்டத்தட்ட நின்று விட்டது. ஜூன் மாதத்தில் ஒரே ஒரு கார்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்டரியானது, ஒரு மாதத்திற்கு 2.4 லட்சம் கார்களை தயாரிக்கக் கூடிய வசதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உதிரி பாக தயாரிப்பு நிறுத்தம்
நானோ காருக்கான உதிரி பாக தயாரிப்பை நிறுத்தி விடுமாறு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம்தான் நானோ காரால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி இழப்பு என்று கூறியிருந்தார். நானோவை நிறுத்துமாறும் அவர் இயக்குநர்கள் குழுவிடம் வற்புறுத்தியிருந்தார். ஆனால் அதற்கு இயக்குநர்கள் குழு சம்மதிக்கவில்லை.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications