பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் இந்துத்துவா இயக்க நிர்வாகி கைது
மும்பை: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை படுகொலை செய்த வழக்கில் ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வீரேந்திரசிங் தாவ்டே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேயை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இதில் நரேந்திர தபோல்கர் உயிரிழந்தனர். மூட நம்பிக்கையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நரேந்திர தபேல்கர் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய வீரேந்திரசிங் தாவ்டே என்ற நபரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர் தாவ்டே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications