பிரதமர் வேட்பாளராக முதல் கூட்டத்தில் மோடி பேச்சு.. ஹரியானாவில் காங். மீது பாய்ச்சல்
ரேவரி, ஹரியானா: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டமாக ஹரியானாவில் இன்று நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். காங்கிரஸ் மீது அவர் கடுமையான தாக்குதலையும் தொடுத்தார்.
ஹரியானா மாநிலம் ரேவரி நகரில், முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் இன்று மோடி கலந்து கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்தக் கூட்டத்திற்காக திரண்டிருந்தனர்.
நரேந்திர மோடி மேடைக்கு வந்ததும் பலத்த கைத்தட்டலும், வரவேற்பும் காதைல் பிளப்பதாக இருந்தது.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மோடி பங்கேற்ற முதல் கூட்டம் இது என்பதால் பெருமளவில் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
டெல்லியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் ரேவரி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும்தான் அதிக அளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் நாடாளுமன்றத்தின் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications