குவைத், துனிஷியா, பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பிரதமர் மோடி கடும் கண்டனம்..
டெல்லி : குவைத், துனிஷியா, பிரான்சில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது...

பிரான்ஸ், குவைத் மற்றும் துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கும் அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
மனித இனம் அமைதி, சகோதரத்துவத்தால் மட்டுமே முன்னேற முடியும். பயங்கரவாதம், வன்முறையால் முன்னேற முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரேபிய நாடான குவைத்தில் உள்ள ஷியா மசூதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
அதனை தொடர்ந்து வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். துனிசியாவின் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியான இம்பீரியல் மர்ஹபா ஹோட்டலில் மர்மநபர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications