For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண் குழந்தைகளின் கல்விக்காக ரூபாய் 21 லட்சம் நன்கொடை - மோடி வழங்கினார்
டெல்லி: பெண் குழந்தைகளின் கல்விக்கு நரேந்திரமோடி ரூபாய் 21 லட்சம் நன்கொடை அளித்து உதவியுள்ளார்.
குஜராத் அரசில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பியூன்களின் பெண் குழந்தைகளது கல்விக்காக நரேந்திரமோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூபாய் 21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இத்தகவலை அவர் "டுவிட்டர்" சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்வராக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூபாய் 21 லட்சம் கொடுத்தேன்" என்று மோடி கூறியுள்ளார்.
Comments
English summary
Narendra modi donated rupees 21 lakhs for the purpose of poor girl children education.
Story first published: Saturday, May 24, 2014, 11:51 [IST]