வதோதராவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் மோடி! டீக்கடைக்காரர் முன்மொழிந்தார்!!
Subscribe to Oneindia Tamil
வதோதரா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை டீக்கடைக்காரர் ஒருவரும் முன்மொழிந்தார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.

வதோதராவில் இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ திறந்த ஜீப்பில் மோடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றார்.
அங்கு டீக்கடைக்காரர் ஒருவர் உட்பட மொத்தம் 5 பேர் முன்மொழிய நரேந்திர மோடி தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுகிறார். இங்கு ஏப்ரல் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications