For Quick Alerts
For Daily Alerts
Just In
நரேந்திர மோடி ஒரு 'அவசர மாப்பிள்ளை': சரத்பவார்
நாக்பூர்: சோனியா கலந்து கொண்ட நாக்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி நாக்பூரில் உள்ள சிக்லி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய சரத்பவார், ‘'பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி தற்போதே நாட்டின் பிரதமரானது போல் நடந்துக்கொள்கிறார்' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், மக்கள் வாக்களித்து முடிவு தெரிவதற்கு முன்னரே, தான் பிரதமரானது போல நினைக்கும் மோடி 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார் சரத்பவார்.
Comments
lok sabha election 2014 congress sonia sarad pawar bjp modi லோக்சபா தேர்தல் 2014 காங்கிரஸ் சோனியாகாந்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் பாஜக மோடி
English summary
Sharad Pawar, the chief of the Nationalist Congress Party (NCP), took a dig at Narendra Modi, saying the BJP's prime ministerial nominee was a "groom in hurry" who had declared himself victorious even before the people's mandate was out.
Story first published: Monday, April 7, 2014, 17:57 [IST]