எல்லாரும் அமரநிலையை.... பாரதியார் கவிதையை தமிழில் கூறி பேசிய மோடி!
Recommended Video

டெல்லி: பாரதியார் கவிதை தமிழில் வாசித்தபடி மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
இதையடுத்து அவர் தனது 5-ஆவது சுதந்திர தின உரையை தொடங்கினார். அப்போது பொருளதாரம் குறித்து பேசிய மோடி சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பேசினார்.

இதையடுத்து எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார் என்று அவரது கவிதையை மேற்கோள்காட்டி பேசினார்.
பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடலில்தான் மோடி சுட்டிக் காட்டிய வரி இடம் பெறுகிறது. பாரதியாரின் உணர்ச்சிமிக்க தேச பக்திப் பாடலில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி குறிப்பிட்ட அந்த வரி வரும் பகுதி இதோ:
எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் மரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் -- வாழ்க












Click it and Unblock the Notifications