சீனாவுடன் போட்டிபோட இந்தியாவுக்கு தேவை மூவர்ண புரட்சி- பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: 'இந்தியா மீண்டும் பாதைக்கு திரும்புகிறது, சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டம்' என்ற சீர்திருத்தங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
நமது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த மனித வளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,. இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அப்போதுதான் சீனாவுடன் இந்தியா போட்டியிட முடியும். சீனாவுடன் போட்டிபோட தயாராகுவதற்கு நமது தேசிய கொடி நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டுள்ளது. நமது தேசியக் கொடியை எடுத்துக்கொள்ளுங்கள், பச்சை நிறம், இரண்டாவது ஒரு பசுமை புரட்சியை நினைவுபடுத்துகிறது. வேளாண் பொருள் உற்பத்தியை பெருக்குதல், மதிப்பு கூட்டுதல், வேளாண் தொழில்நுட்பம், சேமிப்பு கிடங்கை பன்முகப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய கொடியின் மத்தியிலுள்ள வெள்ளை நிறம் வெண்மை புரட்சியை நினைவவூட்டுகிறது. நாட்டில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
காவி நிறம் என்பது நமது சக்தியையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுக்கு காவி புரட்சி தேவைப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏற்றவிதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெருக்குதல், சூரிய மின்சக்தியை பெருக்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய கொடியிலுள்ள அசோக சக்கரம் நீல நிறத்திலுள்ளது. கடலின் வண்ணத்திலான அதை பார்க்கும்போது மீன் வளத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
உள்கட்டமைப்பு வளர்ச்சி என்றால் சாலை போடுவது மட்டுமே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. இனிமேல் மின்சார உற்பத்தியை பெருக்குவதும் நினைவுக்கு வர வேண்டும். ஆற்றங்கரைகளில், நதிபடுகைகளில் முன்பெல்லாம் நகரங்கள் அமைக்கப்பட்டன. இப்போது நெடுஞ்சாலைகளை ஒட்டி நகரங்கள் உருவாகுகின்றன. நாம் வேலைவாய்ப்புகளை பெருக்கி, மாற்றத்தை உருவாக்க 100 தரம்மிக்க புதிய நகரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications