மோடியை ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டி வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.: காங்கிரஸ் தாக்கு
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஆட்டி வைக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
56 இன்ச் அகல மார்பு கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நாகர்பூரில்(ஆர்.எஸ்.எஸ்.) இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ஒருவர். தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். 2004 மற்றும் 2009ம் ஆண்டு நடந்த தேர்தல்களின்போதும் பாஜக நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்றார்கள். தற்போதும் அதையே தான் கூறி வருகிறார்கள்.
வாரனாசியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. வாரனாசியில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரிமோட் கன்ட்ரோல் மூலம் அரசை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications