குண்டுவெடிப்பு புகை ஒரு பக்கம்... பொருட்படுத்தாமல் பேசிய மோடி
பாட்னா: தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி நரேந்திர மோடியின் கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட புகை சற்றும் அணையாமல் எழுந்து கொண்டிருந்த நிலையிலும் மோடி பேசினார்.
பாட்னா ரயில் நிலையத்திலும், மோடியின் கூட்டம் நடைபெற்ற காந்தி மைதானத்திற்கு அருகிலும் 7 குண்டுகள் வெடித்தன. இவை அனைத்தும் குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டுகள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் மோடி கூட்டம் தொடங்கியது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட புகை அடங்காமல் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்த நிலையிலும் மோடி அந்தப் பக்கம் மேடையில் பேசி் கொண்டிருந்தார்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மோடி கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அது அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கூட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications