அகமதாபாத் டீக்கடையிலிருந்து மோடி அதிரடி பிரசாரம் - 1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு!
அகமதாபாத்: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல காங்கிரஸ்காரர்கள் போட்டு வைத்த டிகாக்ஷனை எடுத்து பாஜக காரர்கள் சூப்பராக ஊர் ஊராக டீ போட்டுக் கலக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் டைரக்டாக தற்போது மோடியே டீ கப்பை கையில் எடுத்து விட்டார். அதாவது தேநீருடன் ஒரு விவாதம் என்ற நூதனப் பிரசாரத்தை அவர் அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
மேற்கு அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் காதியா டீக்கடையிலிருந்து தனது நூதனப் பிரசாரத்தை மேற்கொண்டார் மோடி. இதை நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். அத்தோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் டீக்கடைகளிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார்.

டீ சாப்டுட்டே பேசலாமே
தேநீர் பருகியபடி ஒரு விவாதம் என்ற இந்த நிகழ்ச்சியை இன்று மோடி தொடங்கி வைத்து நாடு முழுவதும் காங்கிரஸார் மேற்கொண்டு வரும் டீ விற்பனையாளர் என்ற பிரசாரத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டீக்கடையில் மோடி
இன்று மாலை இஸ்கான் காத்தியா டீக்கடைக்கு வந்தார் மோடி. அங்கு டீ வாங்கிச் சாப்பிட்ட மோடி பின்னர் பேசினார்.

1000 டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பு
மோடியின் இந்த டீக்கடை பிரசாரத்தை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தனர். நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில், மொத்தம் 300 நகரங்களில் இந்த நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது.

நேரடி விவாதம்
இந்த 1000 டீக்கடைகளில் 30 கடைகளில் உள்ளவர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஊழல், நல்லாட்சி உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

கடைக்கு ஐந்து பேர்
இதற்காக ஒவ்வொரு டீக்கடையிலும் 5 பேரை தேர்வு செய்து அவர்கள் மோடியிடம் கேள்வி கேட்டனர்.

இன்றைய கச்சேரி..
மோடி நடத்தும் இன்றைய டீக்கடை விவாதத்தில் நல்லாட்சி என்பது குறித்து முக்கியமாக பேசினார்.
மோடியுடன் ஒரு கப் டீ வீடியோ
மோடியுடன் ஒரு கப் டீ வீடியோ












Click it and Unblock the Notifications