ஹிந்து மகாசபை தலைவர் வீர் சாவார்க்கர் பிறந்த நாள் - பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!!
டெல்லி: ஹிந்து மகாசபை தலைவரான வீர சாவார்க்கரின் 131வது பிறந்தாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தவர் வீர சாவர்க்கர். அத்துடன் இன்றைய ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம், அகன்ற பாரதம் போன்ற பாஜகவின் கோட்பாடுகளின் தந்தை என்று கூறப்படுகிறவர் வீர சாவர்க்கர்.
இன்று அவரது பிறந்தநாளையொட்டி தமது அலுவலகத்தில் வீர சாவர்க்கர் படத்துக்கு மலர் தூவிர் மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் தலைசிறந்த கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான விநாயக் தாமோதர் சாவார்க்கரின் பிறந்த நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். ஹிந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவார்க்கருக்கு, ஒட்டுமொத்த நாடே மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அவரின் தியாக உள்ளத்திற்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி கொலையில் சாவார்க்கர்?
கடந்த 2004ஆம் ஆண்டு அந்தமானில் சாவார்க்கரின் பொன்மொழிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது பேசிய அப்போதைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர், மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படுவர் வீர சாவார்க்கர் என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications