எனக்காக தீய எண்ணத்துடன் நான் எதையும் செய்ய மாட்டேன்: மோடி
டெல்லி: எனக்காகவோ அல்லது எந்த ஒரு தீய எண்ணத்துடனோ நான் எதையுமே செய்ய மாட்டேன் என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
மத்திய அரசு தற்போது முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. அரசு நிர்வாகத்துக்கு உத்வேகம் கொடுக்க வேண் டியது அவசியமாகும். அதற்கு டெல்லியில் மிகவும் வலிமையான அரசு அமைய வேண்டும்.

அந்த நோக்கத்தில்தான் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படவில்லை. பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய கருத்தே நல்லாட்சி மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சி என்பதாகும்.
தேர்தல் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பாஜகவின் ஒட்டு மொத்த நோக்கத்தை பிரதிபலிப்பக உள்ளது. நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு கடுமையாக உழைப்பேன்.
எனக்காகவோ அல்லது தீய எண்ணத்துடனோ நான் எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications