மோடி மனைவிக்கு பாரத ரத்னா.. ஏன் நோபல் பரிசே கொடுக்கலாம்: அசாம் முதல்வர் தருண் கோகய்
குவஹாத்தி: மோடிக்காக தன்னை சன்னியாசிக்கிக் கொண்ட அவரது மனைவி ஜஷோடாபென்தான் உலகத்திலேயே தியாகத்தின் திருவுருவம்.. அவருக்கு பாரத் ரத்னா..இல்லையில்லை.. நோபல் பரிசும் கூட கொடுக்கலாம் என்று அசாம் முதல்வர் தருண் கோகய் கூறியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமது வேட்பு மனுவில் திருமணமானதை முதன் முறையாக ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தம் பங்குக்கு அசாம் மாநில முதல்வர் தருண் கோகயும் இந்த கோதாவில் இறங்கியுள்ளார். அவர் இது பற்றி கூறியுள்ளதாவது:

மோடியின் மனைவி ஜஷோடபென் தியாகத்தின் திருவுவுருவம்.. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே இப்படி ஒருவர் இருக்க முடியாது. இத்தனை காலம் அத்தனை வலிகளையும் சுமந்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்... அவரது வலியை நாட்டில் யாருமே உணரவில்லையே.,.
அவரது அமைதிக்காக நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் ஜஷோடபென்னுக்கு பாரத் ரத்னா விருது தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போகிறேன். அவருக்கு 100 முறை சல்யூட் செலுத்துகிறேன். அவர் மிகவும் மரியாதைக்குரிய பெண்.
ஜஷோடபென் தான் உண்மையான சன்னியாசி. மோடி தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டாலும் அதிகாரப் பசி கொண்டவர். அதாவது மோடி அமெரிக்க சன்னியாசி.
அவருக்கு தெரிந்தது எல்லாம் குஜராத் முதல்வர் பதவி மட்டும்தானே.. இப்படியான ஒரு மனிதர் தான் நாட்டின் பிரதமராகப் போகிறாராம்...
இவ்வாறு தருண் கோகய் விமர்சித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications