2008 மும்பை தாக்குதல்.. அதை மறக்கவே மாட்டோம்.. பிரதமர் மோடி சூளுரை!
அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்தார்.
2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய ஹோட்டல்கள், ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தீவிரவாதவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பின்னர் கோர்ட் உத்தரவுப்படி தூக்கில் இடப்பட்டான்.
இந்த நிலையில், குஜராத்தின் கெவாடியாவில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 12 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலஅப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் .பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியாயினர்.2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடுத்த காயங்களை, வேதனைகளை இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதல்களில் உயிரை இழந்த காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

நாடு பயங்கரவாதத்தை தற்போது பல்வேறு புதிய கொள்கைகளுடன் எதிர்த்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க அரசு முயற்சித்து வருகிறது. மும்பை தாக்குதல்கள் போன்ற சதி திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்து வருகிறோம். நமது நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு வீர வணக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications