குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.. பேளூர் மடத்தில் மோடி
கொல்கத்தா: குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என கொல்கத்தாவில் உள்ள பேளூர் மடத்தில் தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தா துறைமுகத்தில் 150ஆவது விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மம்தா பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஹவுரா நகர்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்திற்கு சென்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்
அங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இந்திய குடியுரிமை
இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவ்வாறு துன்பங்களால் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படுகிறது.
|
புரிய வைப்பது கடமை
சிலர் வேண்டுமென்றே இந்த சட்டத்தை புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். நாங்கள் ஒரே நாள் இரவில் எந்த சட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஏராளமான இளைஞர்கள் இந்த சட்டம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு புரிய வைப்பது நமது கடமை என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications