ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறேன்- மோடி
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகளை பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்க்கிறார். இதுகுறித்து அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் புள்ளிகளிடம் வெளிப்படையாகவே பேசியும் உள்ளார்.
முதலீட்டாளர்களுடன் நடந்த சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் மோடி. மஸ்தார் நகர் சென்றபோது அங்கு முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினார் மோடி.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

முதலீட்டாளர்கள் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசியபோது எமிரேட்ஸிலிருந்து 1 லட்சம் கோடி முதலீடுகளை தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

விவசாயத்தில் முக்கியத்துவம்
அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், வேர்ஹவுஸிங் ஆகிய துறைகளில் பெருமளவிலான முதலீடுகளை தான் எதிர்நோக்கியிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

பெரும்பான்மை அரசு இருக்கிறது
இந்தியாவில் தற்போது பெரும்பான்மையுடன் கூடிய மத்திய அரசு செயல்பாட்டில் இருப்பதாகவும், இன்சூரன்ஸ், ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி உள்ளிட்டவற்றில் தற்போது பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சூரிய சக்தி மின்சாரம்
சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் முதலீடுகள் குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசியுள்ளார். குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் குறித்தும் அதில் முதலீடுகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் வந்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மோடி மேலும் பேசுகையில், வீட்டு வசதியைப் பொறுத்தவரை தொழில்நுட்பம், வேகம், தரமான கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா விரும்புகிறது. மேலும் குறைந்த விலையில் வீடு கட்டுவது என்பது முக்கியமானது என்றார் அவர்.

குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் வந்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மோடி மேலும் பேசுகையில், வீட்டு வசதியைப் பொறுத்தவரை தொழில்நுட்பம், வேகம், தரமான கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா விரும்புகிறது. மேலும் குறைந்த விலையில் வீடு கட்டுவது என்பது முக்கியமானது என்றார் அவர்.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்
அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் 800 பில்லியன் டாலர் முதலீடுகளை மோடி எதிர்பார்க்கிறாராம். தற்போது அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளின் அளவு 3 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலேயே உள்ளது. இவை மட்டுமே நேரடி முதலீடாகும். மற்றவை பங்குச் சந்தையிலான முதலீடுகள்தான்.

எடிசலாட், எமார்
எடிசலாட் மற்றும் எமார் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் இந்தியாவில் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததால் முதலீடுகளை நிறுத்தி விட்டன.

60 பில்லியன் டாலர்
70களில் இந்தியா - எமிரேட்ஸ் இடையிலான வர்த்தக அளவானது 180 மில்லியன் டாலராக இருந்தது. தற்போது இது 60 பில்லியன் டாலர் அளவிலேயே உள்ளது.

34 ஆண்டு இழப்பை சரிக்கட்ட வேண்டும்
கடந்த 34 ஆண்டுகளிலும் இரு நாடுகளும் பல்வேறு முக்கியத் தருணங்களை, முதலீடுகளை நழுவ விட்டு விட்டன. அதை நாம் நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் மோடி கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications