வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை மோடி தெரிவிக்க வேண்டும்: காங். வலியுறுத்தல்
பானாஜி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி தனது வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை சரியாக தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று வதோதராவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். பொதுவாக வேட்பு மனுத் தாக்கலின் போது தரப்படுகின்ற படிவத்தில் திருமணம் தொடர்பாக கட்டம் ஒன்று இருக்கும். அதில் மணமானவரா அல்லது இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில், மோடி தனது வேட்புமனுத் தாக்கலின் போது தனது திருமணம் குறித்த உண்மையான நிலையைக் குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கோவா மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கூறுகையில், ‘நரேந்திர மோடியின் மனைவியாக பெண்கள் பள்ளி ஆசிரியை யசோதா பென் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
தற்போது மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா என்பதை குறிப்பிட வேண்டும். திருமணம் ஆகிவிட்டதா என்பது தொடர்பான கட்டத்தை அவர் பூர்த்தி செய்யாமல் இருக்க முடியாது. யார் அந்த பெண்? மீடியாக்கள் அவரை மோடியின் மனைவி என்று கூறுகின்றனர். நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டாமா?. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி வேட்புமனுவின் எந்த காலமும் நிரப்பாமல் விடக்கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications