நரேந்திர மோடியின் 'போலி என்கவுண்டர்'... ப.சிதம்பரம் அதிரடி தாக்கு!
டெல்லி: அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தி்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்தியதாகவும், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறுவது ஒரு போலி என்கவுண்டர் ஆகும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
உண்மைகளை மறைக்கும் வகையில் மோடி பேசுவதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
உண்மைகள் அப்படியே இருக்கும் நிலையி்ல் ஏன் மோடி இப்படிப் பேச வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
இதுகுறி்த்து அவர் கூறியதாவது...
போலி என்கவுண்டரை அரங்கேற்றும் மோடி
உண்மை அப்படியே உள்ளது. மோடி செய்வது போலி என்கவுண்டர். இது ஆச்சரியம் தருகிறது.
உண்மைதான் வெல்லும்
மோடி சொல்வது செல்லாது, உண்மைதான் வெல்லும். காரணம் அதை மறைக்க முடியாது. அது உண்மையாகவே இருக்கும்.
6 பெர்சன்ட்தான்
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் வெறும் 6 சதவீதம்தான்.
முதல் காங். ஆட்சியில் 8.4 சதவீதம்
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்து. இதுதான் வளர்ச்சியின் பொற்காலம்.
கடந்த 4 ஆண்டுகளில் 7.3 சதவீதம்
கடந்த நான்கு ஆண்டுகளில் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உள்ளது.