விட்டால் வாஜ்பாயையே கட்சியை விட்டு துரத்தியிருப்பார் மோடி - ராகுல் காந்தி
கராலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மட்டும் தொடர்ந்து அரசியலில் நீடித்திருந்தால், ஜஸ்வந்த் சிங், அத்வானிக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். வாஜ்பாயையும் அரசியலை விட்டே துரத்தியிருப்பார் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கராலி என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசாரத்தின்போது மோடியை இவ்வாறு கடுமையாகத் தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி. இந்தப் பிரசாரத்தின்போது மூத்த தலைவர்களை மோடி மதிக்காமல் ஒதுக்குவதை சுட்டிக் காட்டிப் பேசினார் ராகுல் காந்தி.
இது தொடர்பாக மேலும் ராகுல் பேசியதாவது :-

தொழிலதிபர்களின் காவலர்...
"போகும் இடமெல்லாம் இந்த நாட்டைக் காக்கும் வாட்ச்மேன் வேலையை எனக்குத் தாருங்கள் என்று மோடி கேட்கிறார். ஆனால் உண்மையில் இவர் தொழிலதிபர்களுக்குத்தான் காவலாக உள்ளார்.

அதானிக்கு வரவேற்பு...
தலைவர்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அவருக்கு அதானி மட்டும் இப்போது போதும்.

இவர் மட்டுமே காரணம் அல்ல...
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தானே காரணம் என்று கூறுகிறார் மோடி. உண்மை அதுவல்ல. தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் துறையினரின் கடுமையான உழைப்பால்தான் குஜராத் வளர்ந்தது.

சாவி கொடுத்தும் பயன் இல்லையே...
நாட்டின் சாவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு இவர் கேட்கிறார். குஜராத் மக்கள் கொடுத்த சாவியையே அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அதானியைத்தான் இவர் வரவேற்கிறார்.

அத்வானி, ஜஸ்வந்த் சிங் நிலைமை...
பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்பட்ட நிலைமை அனைவரும் அறிந்ததே. ஒருவேளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்திருந்தால் அவருக்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும்" என்றார் ராகுல் காந்தி.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications