நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து வழக்கு: நாரிமன் அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக பிரபல சட்ட வல்லுநர் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தற்போதைய கொலிஜிய முறை ஒழிக்கப்பட்டு நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றூக்கு அளித்த பேட்டியில், இந்த சட்ட மசோதா நீதித்துறை சுதந்திரத்தின் வேரை தாக்குவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிராக நானும், பல வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியல் சட்டத்தின் முதன்மையான ஒன்று. ஏதாவது ஒன்றை செய்து, அதற்கு பாதிப்பு ஏற்படுமானால் அது வெறுப்பை உண்டாக்கும். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள் என்றார்.
இந்த சட்ட மசோதா குறித்து ஏற்கனவே சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடத்திய ஆலோசனையின்போது, நாரிமன் பங்கேற்று மசோதாவின் பல்வேறு தவறான அம்சங்களை சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications