உலக பாதுகாப்பு நகரமாக மாற்றப்படுகிறது டெல்லி.. அணு ஆயுதங்களாலும் தாக்க முடியாது!
டெல்லி: அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லியை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்திட ஒரு தடுப்பு அமைக்கும் பணியை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார் நிறுவப்படும். அணுஆயுத ஏவுகணை வானில் வந்தால், 800 கி.மீ துாரத்திற்கு முன்பு வரும்போதே அதை கண்டறிந்து, ஏவுகணையை செயல் இழக்கச் செய்யும். இதை மேலும் மேம்படுத்தி, ஏவுகணையை 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பாலேயே கண்காணித்து செயல் இழக்க செய்ய முடியும்.

இதற்கான பணிகள், வரும் 2016ல் முடிவடையும். டெல்லியில் நிறுவப்பட்டதும் அடுத்து மும்பையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இது போன்று அணுஆயுத தடுப்பு சாதனம் வாஷிங்டன், பாரீஸ், பெய்ஜீங், லண்டன், இஸ்ரேலின், டெல் அவிவ் ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளது. உலக அரங்கில் இது போன்ற பாதுகாப்பு உடைய நகரங்களில் டெல்லியும் ஒன்றாக அமைகிறது.












Click it and Unblock the Notifications