வெளிநாடு, உள்நாடு விவகாரங்களுக்கு தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்- மோடி ஆலோசனை!
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வெளிவிவகார பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்க பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் தோவால் பணியாற்றி வருகிறார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் 1968-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் இவர், வெளியுறவு, உள்துறை அமைச்சகங்களின் செயலர்களுடன் இனைந்து வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்து வருகிறார்.

உள்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பது, மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை, அஸ்ஸாம், நாகலாந்து உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் பிரதமருக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் பணி இவருடையது.
மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக பல நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதன் காரணமாக தோவாலுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கருதுகிறார். எனவே இந்த பதவியை வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரித்து தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை நியமிக்க மோடி பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் தோவாலுக்கு முதல்நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும், புதிதாக பொறுப்பேற்பவருக்கு இரண்டாம் நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும் வழங்க பிரதமருக்கு அதிகாரிகள் யோசனைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications