வெளிநாடு, உள்நாடு விவகாரங்களுக்கு தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்- மோடி ஆலோசனை!
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வெளிவிவகார பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்க பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் தோவால் பணியாற்றி வருகிறார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் 1968-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் இவர், வெளியுறவு, உள்துறை அமைச்சகங்களின் செயலர்களுடன் இனைந்து வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்து வருகிறார்.

உள்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பது, மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை, அஸ்ஸாம், நாகலாந்து உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் பிரதமருக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் பணி இவருடையது.
மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக பல நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதன் காரணமாக தோவாலுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கருதுகிறார். எனவே இந்த பதவியை வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரித்து தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை நியமிக்க மோடி பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் தோவாலுக்கு முதல்நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும், புதிதாக பொறுப்பேற்பவருக்கு இரண்டாம் நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும் வழங்க பிரதமருக்கு அதிகாரிகள் யோசனைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications