பிக்பாஸ் டிவி ஷோவில் பங்கேற்க மறுத்தது ஏன்?: டிவி நடிகை விளக்கம்
மும்பை: பிக் பாஸ் 8 டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை நெளஷீன் அலி சர்தார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு பணப் பிரச்சினை காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியானது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது 8 வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது.
ஒரு வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்களின் செயல்பாடுகளை கேமரா கண்களைக் கொண்டு படம்பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். இதில் பங்கேற்றவர்கள் பிரபலமடைந்துள்ளனர். பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்ற சன்னிலியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி நடிகை நௌஷீன் அலி சர்தான் இந்த சீசனில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதற்கான விளக்கத்தை அவரே கூறியுள்ளார்.
நடிகை போட்ட நிபந்தனை
நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்தேன். அது அவர்களுக்கு சரியாக வரவில்லை அதனால் என்னை அணுகவில்லை என்று கூறியுள்ளார்.
படுக்கை அறையில்
அதாவது ஆண் போட்டியாளருடன் ஒரே படுக்கையில் படுக்க மாட்டேன். தனியாக ஆண் போட்டியாளருடன் இருக்க மாட்டேன்.
கவர்ச்சி உடைகள்
எனக்கு அருகே ஆண் போட்டியாளர் யாரும் படுக்கக் கூடாது. கவர்ச்சிகரமான, உடல் அங்கம் தெரியும்படியான ஆடைகள் உடுத்த மாட்டேன்.
முடியை வெட்டமாட்டேன்
தலைமுடியை வெட்டிக் கொள்ள மாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். எனது நிபந்தனைகளைச் சொன்ன பிறகு அவர்கள்தான் என்னிடம் மீண்டும் அணுகவில்லை என்று கூறியுள்ளார்.
சல்மான்கான்
பிக் பாஸ் போட்டியானது சல்மான் கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடத்துவது. அதில் பங்கேற்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. என்னைத்தான் அவர்கள் மீண்டும் அணுகவில்லை. மற்றபடி சம்பளத் தொகை பிரச்சினை எல்லாம் கிடையாது என்றும் நௌஷீன் அலி சர்தார் கூறியுள்ளார்.