For Daily Alerts
Just In
மோடியுடன் கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவன் சந்திப்பு
டெல்லி: இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.தோவன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து உரையாற்றினார்.
"கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே.தோவன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்" என்ற தகவல் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்றுதான் ராணுவ தளபதியான ஜெனரல்.பிக்ரம் சிங் பிரதமரை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக பிரதமரை, ஆர்.கே.தோவன் சந்தித்தார் என்று பிரதமர் அலுவலக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். தோவன் அவருடைய வாழ்த்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்" என்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary
Navy chief Admiral R.K. Dhowan Thursday met Prime Minister Narendra Modi."Chief of Naval Staff Admiral R.K. Dhowan met the prime minister in South Block," said a post on the Twitter account of the Prime Minister's Office.Modi had met army chief Gen. Bikram Singh Wednesday.
Story first published: Friday, May 30, 2014, 11:20 [IST]