ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 7 தேர்தல் அலுவலர்கள் பலி- 24 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று மாலை நடத்திய தாக்குதலில் தேர்தல் அலுவலர்கள் 7 பேர் பலியாகி உள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா மாவட்டத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அது மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதி. அங்கு வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் வாக்குப் பதிவு எந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள் ஒரு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆஸ்னா என்ற கிராமத்தில் பேருந்தை கண்ணிவெடிகள் மூலம் வெடிவைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 7 தேர்தல் அலுவலர்கள் பலியாகினர். 24 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் காயமடைந்தோரை மீட்பதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications