ஜம்மு காஷ்மீரை மொத்தமாக தூக்கிய காங்கிரஸ் கூட்டணி.. இந்தியா டுடே கணிப்பு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகின்றன.
இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 40-48 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நயா காஷ்மீர் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த பாஜக 27- 32 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2014 தேர்தலில் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த மக்கள் ஜனநாயக கட்சி, இந்தமுறை 6-12 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேசிய மாநாட்டு கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 38.7 % வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.பாஜக 22.9% வாக்கும் பெற வாய்ப்புள்ளதாகவும், மக்கள் ஜனநாயக கட்சி 10.2% வாக்கு பெற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, ஜம்மு மண்டலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று இரண்டாக பிரிக்கின்றனர். இதில் ஜம்முவில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 11-15 இடங்களிலும், பாஜக 27-31 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 29-33 சீட்களிலும், பாஜக 0-1 சீட்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி சுமார் 41% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். அந்தப் பகுதியில் அவர்கள் ஸ்வீப் அடிப்பதே, அவர்களின் முன்னிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று இந்தியா டுடே சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications