மகாராஷ்டிராவில் யார் ஆட்சி? அத்தனை பார்வையும் இவரை நோக்கி.. கிங் மேக்கரான சோனியா காந்தி!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குப் பிறகுதான் தேசியவாத காங்கிரசும் அது தொடர்பாக முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசின் மையக்குழு கூட்டம் மும்பையில் இன்று சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. அதில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தரவில்லை. எனவே தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு அழைப்புவிடுத்து, 24 மணி நேர கெடு கொடுத்துள்ளார்.
எனவே சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் இணைந்து, ஆட்சியமைக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
நவாப் மாலிக் பேட்டி
முன்னதாக இன்று மதியம் மும்பையில் நிருபர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில், ஒருவரான நவாப் மாலிக் கூறுகையில், எங்களது ஆதரவை சிவசேனா கட்சி நாடி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

காங்கிரஸ்
மாநிலத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக விவாதம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை பொருத்துதான், தேசியவாத காங்கிரஸ் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.

கூட்டணி தர்மம்
ஏனெனில் தேர்தலின் போது நாங்களும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட்டோம். எனவே எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் இணைந்துதான் எடுப்போம். இவ்வாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டம்
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் நடைபெற்ற அந்த கட்சியின், செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மாலையில் நடைபெற்ற கூட்டத்திலும் இறுதி முடிவு வெளியாகவில்லை. எனவேதான், சிவசேனாவால் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இப்போது, சிவசேனாவுடன் இணைந்து, தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் சோனியா காந்தியின் முடிவுதான் முக்கியமானது.
எனவே, காங்கிரசின் முடிவை நோக்கி அரசியல் விரம்சகர்கள் பார்வை திரும்பியுள்ளது.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications