பீகாரில் பாஜக கூட்டணி 155 தொகுதிகளை கைப்பற்றும்: புது ட்விஸ்ட் கொடுத்த நியூஸ்24 கருத்துக்கணிப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி தான் அமோக வெற்றி பெறும் என்று நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. 5வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மட்டும் 59.46
சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நியூஸ் 24 செய்தி தொலைக்காட்சி சேனல் மற்றும் அரசியல் ஆய்வு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 155 இடங்களில் வெற்று பெறும் வாய்ப்பு உள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெறும் 83 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
பிற நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி பீகாரில் ஐக்கிய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் சாணக்கியா அமைப்பின் கருத்துக்கணிப்பு முற்றிலும் மாறுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications