ஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்
லக்னோ: ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதைவிட ஸ்மார்ட் கிராமங்கள் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் அதிக நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லும் இந்திய குழுவின் தலைவராக உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆசாம் கான் ஸ்மார்ட் நகரங்களை விட ஸ்மார்ட் கிராமங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆசாம் கான் கூறியதாவது:
நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உலக வங்கியின் உதவியை மத்திய அரசு கோரியும் உள்ளது.
அதே நேரத்தில் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயருதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நகரங்கள் கூடுதல் சுமையை தாங்கும் நிலை ஏற்படுகிறது. இது சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
தற்போது ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கினால் கூடுதலாகத்தான் கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயருவார்கள். ஆகையால் ஸ்மார்ட் சிட்டிக்கான நிதியை ஸ்மார்ட் கிராமங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; கிராமங்களில் பள்ளிக் கூடங்கள், மின்சார வசதியை மேம்படுத்த வேண்டும்.
பிரதமரின் தொகுதியான வாரணாசிக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. குறிப்பாக நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மாநிலங்கள் தங்களது திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற இயலவில்லை.
இவ்வாறு ஆசாம் கான் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications