ஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்
லக்னோ: ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதைவிட ஸ்மார்ட் கிராமங்கள் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் அதிக நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லும் இந்திய குழுவின் தலைவராக உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆசாம் கான் ஸ்மார்ட் நகரங்களை விட ஸ்மார்ட் கிராமங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆசாம் கான் கூறியதாவது:
நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உலக வங்கியின் உதவியை மத்திய அரசு கோரியும் உள்ளது.
அதே நேரத்தில் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயருதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நகரங்கள் கூடுதல் சுமையை தாங்கும் நிலை ஏற்படுகிறது. இது சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
தற்போது ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கினால் கூடுதலாகத்தான் கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயருவார்கள். ஆகையால் ஸ்மார்ட் சிட்டிக்கான நிதியை ஸ்மார்ட் கிராமங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; கிராமங்களில் பள்ளிக் கூடங்கள், மின்சார வசதியை மேம்படுத்த வேண்டும்.
பிரதமரின் தொகுதியான வாரணாசிக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. குறிப்பாக நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மாநிலங்கள் தங்களது திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற இயலவில்லை.
இவ்வாறு ஆசாம் கான் தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications