For Daily Alerts
Just In
நீட் தோல்வி- டெல்லியில் 8-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
நீட் தேர்வு தோல்வியால் டெல்லியில் மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
நீட் தோல்வி..மாணவி தற்கொலை முயற்சி..மாணவர் தற்கொலை- வீடியோ
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர்களின் மருத்து படிப்பு கனவை தகர்த்து வருகிறது நீட் தேர்வு. தமிழகத்தில் கடந்த ஆண்டு அனிதா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து மரணித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் பிரணவர் மகேந்திரதா என்ற மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத விரக்தியில் பிரணவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக துவாரகா வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
A 19-year-old Delhi Student allegedly committed suicide after failing in Neet Exam on Monday.