நீட்: ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப், டெல்லி அகான்ஷா சிங் 720/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை
டெல்லி/புவனேஷ்வர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஒடிஷாவை சேர்ந்த மாணவர் சோயிப் அஃப்டாப் மற்றும் டெல்லியை சேர்ந்த அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் மற்றும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வுகளில் இதுவரை முழு மதிப்பெண்களை எந்த மாணவரும் பெற்றது இல்லை. முதல் முறையாக மொத்த மதிப்பெண்களையும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் மற்றும் சோயிப் அஃப்டாப் பெற்றுள்ளனர்.
சோயிப் அஃப்டாப் ஒடிஷாவின் ரூர்கேலாவை சேர்ந்தவர். கோடாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சோயிப் பயிற்சி பெற்றார்.
நடப்பாண்டில் மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த மாதம் செப்டம்பர் 13-ல் கடுமையான கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே நடைபெற்றது.












Click it and Unblock the Notifications