இந்தியா ஜனநாயக நாடானது நேருவால் அல்ல.. காங்கிரசில் யாருக்கும் வரலாறு தெரியவில்லை - பிரதமர் மோடி
இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதற்கு நேரு காரணம் இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
இன்று அந்த உறுப்பினர்களின் உரைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தொடக்கத்தில் இருந்தே அவர் காங்கிரசுக்கு எதிராகப் பேசினார்.
முக்கியமாக நேருவின் கொள்கைகளை குறித்துப் பேசினார். நேருவிற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளாசல்
தொடக்கத்திலேயே அவர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசினார். காங்கிரஸ் கட்சி இவ்வளவு வருடம் கொஞ்சம் கூட நேர்மையான ஆட்சியைக் கொடுக்கவில்லை என்றார். முக்கியமாக காங்கிரஸ் இங்கு இருக்கும் மக்களைப் பிளவுபடுத்தி துண்டாடிவிட்டது என்று குறிப்பிட்டார்.
|
நேரு இல்லை
மேலும் ''நேரு மூலம்தான் இந்தியா ஜனநாயக நாடாக மாறியது என்று சொல்வது தவறு. அதற்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. இந்தியாவுடன் ஜனநாயகம் பின்னிப்பிணைந்து இருந்துள்ளது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வரலாறு தெரியவில்லை
அதேபோல் ''காங்கிரஸ் கட்சியில் யாருக்குமே வரலாறு தெரியாதா?. வரலாற்றுப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். ஏன் இப்படி காங்கிரஸ் கட்சியினர் மோசமாக வரலாற்றை மாற்றுகிறார்கள்'' என்று நேரு குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசினார்.
|
பிரதமர் பட்டேல்
முக்கியமாக ''காங்கிரஸ் கட்சியில் அப்போது இருந்த உறுப்பினர்களின் விருப்பப்படி சர்தார் வல்லபாய் பட்டேல்தான் முதல் இந்திய பிரதமராகி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இருந்த பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சென்று இருக்காது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications