நேபாள தூதரக வருகைப் பதிவேட்டில் செல்போனைப் பார்த்து காப்பியடித்து 'இரங்கல்' எழுதிய ராகுல்!
டெல்லி: நேபாள தூதர வருகைப் பதிவேட்டில் தமது செல்போனில் இருந்ததைப் பார்த்து காப்பியடித்து ராகுல் காந்தி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் செய்தியை எழுதியதாக புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
56 நாட்கள் லீவு போட்டுவிட்டு "எங்கோயோ' போன காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திரும்பி வந்தது முதல் தலைப்புச் செய்திகள்தான்.. விவசாயிகள் பேரணிக்கு தலைமை, நாடாளுமன்றத்தில் பேசுவது, பஞ்சாப் போவது, மகாராஷ்டிராவில் பாதயாத்திரை என அசத்திக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேபாள நிலநடுக்கத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று சென்றார் ராகுல்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலநடுக்கப் பாதிப்புகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் தூதரகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் தமது இரங்கலைப் பதிவு செய்தார்.
அப்போது, தமது செல்போனில் உள்ள இரங்கலைப் பார்த்து பார்த்து வருகைப் பதிவேட்டில் மெதுவாக 'காப்பியடித்து' ராகுல் எழுதிக் கொண்டிருந்தார்.
ஊடகங்கள் சும்மா விடுவார்களா? அப்படியே வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்திவிட்டனர்.
இப்போது ராகுலின் 'இரங்கல்' ஈயடிச்சான் காப்பிதான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்!!












Click it and Unblock the Notifications