3 நிமிடத்தில் தொடர்பை இழந்து விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் பரிதாபமாக பலி

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 3 நிமிடத்தில் தொடர்பை இழந்த நிலையில், சிவபுரி என்ற பகுதியில் ஏர் டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தளத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேபாளத்தின் தலைநகரான் காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸிக்கு செல்லும்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூத்த விமானியான அருண் மல்லா என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்படத் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் அலுவலக ஊழியர்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் சீனாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்ததாகவும், ரசூவாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Nepal Accident


காத்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் புதன்கிழமை பிற்பகல் 1.54 மணிக்கு புறப்பட்டுள்ளது. சூர்யாசவுர் என்ற பகுதியை அடைந்த பிறகு ஹெலிகாப்டர் சுமார் 1.57 மணிக்கு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்துள்ளது. இந்த விபத்தில் விமானி மற்றும் 4 பயணிகள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஜூலை 24 ம் தேதி திடீரென சறுக்கி விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+