நேபாள பிரதமர் ஒரு பைத்தியம்...அவரது ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும்...இந்து மதகுருக்கள் கோபம்!!
அயோத்தி: ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று அந்த நாட்டின் பிரதமர் சர்மா ஒலி நேற்று கூறியிருப்பதற்கு அயோத்தியில் இருக்கும் இந்து மதக்குருக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நேபாள ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கடவுள் ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் இந்தியா போலியான அயோத்தியை உருவாக்கி இருக்கிறது என்றும் நேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறி இருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக நேற்று இரவே பதிலடி கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அயோத்தியில் இருக்கும் இந்து மதகுருக்கள் ஒலிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ராமர் கோயில் டிரஸ்ட் உறுப்பினரான மஹந்த் திதேந்திர தாஸ் கூறுகையில், ''ராமர் இங்கிருக்கும் சராயு ஆற்றுக்கு அருகே பிறந்தவர். அயோத்தியை சேர்ந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்தியர்களுக்கு உள்ளது. சீதை நேபாளத்தைச் சேர்ந்தவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், ராமரை நேபாளி என்று கூறுவது தவறு. இவ்வாறு கூறிய ஒலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
''இந்து ராஜ்யமாக இருந்த நேபாளம் இன்று பாகிஸ்தான், சீனாவின் கைகளுக்கு சென்றுள்ளது. நம்முடைய இந்து மத புத்தகங்களில் சராயு ஆற்றின் கிழக்கே இருக்கும் பகுதி அயோத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் சராயு ஆறு இல்லை. அவ்வாறு இருக்கும்போது எப்படி ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று கூற முடியும். இன்னும் இரு மாதத்திற்குள் அவரது ஆட்சி கவிழும்'' என்று ராம் தல் டிரஸ்ட் உறுப்பினர் கல்கி ராம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மதகுருவான மஹந்த் பரம்மஹம்ச ஆச்சார்யா தெரிவித்து இருக்கும் செய்தியில், ''ராமர் உலகிற்கே சொந்தமானவர். நேபாள மக்கள் ஒலிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். ஒலி ஒரு பைத்தியக்காரர்'' என்று சாடியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications