மேகி தடையை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் நெஸ்லே வழக்கு!
மும்பை: மேகி நூடுல்ஸ் தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் சார்பில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘நெஸ்லே' நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்' அபாயகரமான அளவில் மூலப்பொருள் கொண்டிருப்பதாக கூறி பல மாநிலங்கள் தடை செய்தன.

பின்னர் மத்திய அரசின் உணவு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மேகிக்கு தடை விதித்தது. இதனால் மேகி விற்பனை அடியோடு நின்றதுடன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே மேகிக்கு உணவுதர கட்டுப்பாட்டு ஆணையம் விதித்த தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் மேகி நூடுல்சில் அதிக ரசாயன பொருள் கலப்பது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து நெஸ்லே நிறுவனம் நாடு முழுவதும் மேகி பெட்டலங்களை திரும்ப பெற்று கொண்டது. இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எனவே, உணவுதர கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவுப்படி மராட்டிய அரசு இதற்கு தடை விதித்ததை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை காரணம் காட்டி, மேகி பொட்டலங்களை திரும்ப பெறுவதை நிறுத்தப்போவதில்லை என்றும் நெஸ்லே உறுதியளித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications