ஐயோ.. நெஞ்சே பதறுதே! அலறும் 10 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் மிருகம் போல தாக்கிய ஆசிரியர்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: வெறும் 10 வயதே ஆன சிறுவனை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் ரொம்பவே முக்கியமானவர்கள். மாணவர்களின் எதிர்காலத்தையே இந்த ஆசிரியர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. பல மாணவர்கள் ஆசிரியர்களால் வாழக்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.

 Netizens Shocked to see Punjab Student Brutally Thrashed By school Teacher

பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என்ற போதிலும், சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாகவும் நடந்து கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

10 வயது சிறுவன்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது பள்ளி மாணவன் ஒரு ஆசிரியரால் டார்ச்சர் செய்யப்பட்டுள்ளான். இரு மாணவர்களை அழைத்து அந்த சிறுவனின் கை, கால்களைப் பிடித்துக் கொள்ள வைத்து அவர் இப்படி கொடூரமாகத் தாக்கியுள்ளார். பஞ்சாப் லூதியானாவில் இருக்கும் ஒரு பள்ளியில் தான் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த குழந்தையை இப்படி அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகி மாநிலத்தையே உலுக்கிய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த லூதியானா போலீசார் இந்த விகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொடூர தாக்குதல்: அந்த சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர், இது குறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்றும் அப்படிச் சொன்னால் பள்ளியில் இருந்து டிசி கொடுத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் பாவம் அந்த சிறுவனும் தனது வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், அந்த சிறுவன் நடக்கச் சிரமப்படுவதை அவரது தாயார் கவனித்துள்ளார். இதனால் ஸ்கூலில் என்ன நடந்தது என அவர் கேட்டுள்ளார்.

முதலில் சிறுவன் எதையும் சொல்லாமல் மவுனமாகவே இருந்துள்ளார். அதன் பிறகே பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த தாய், முதலில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

 Netizens Shocked to see Punjab Student Brutally Thrashed By school Teacher

ஷாக் வீடியோ: இதற்கிடையே இரண்டு மாணவர்கள் பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியர் இந்த சிறுவனை கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அந்தளவுக்கு அப்பாவி சிறுவனை அந்த ஆசிரியர் மிருகம் போலத் தாக்குகிறார். அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக பெங்களூரில் நடந்த மற்றொரு ஷாக் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதில் மழலையர் பள்ளியில் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய ஆசிரியர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அப்போது ஒரு குழந்தையை அங்கிருந்த மற்றொரு குழந்தை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. மழலையர் பள்ளியில் குழந்தைகள் தனியாக விட்டுச் செல்வது எவ்வளவு தவறு என்பதைக் காட்டுவதாக அது அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+