செயற்கைக் கோள்களுக்கு இன்சூரன்ஸ்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.42 கோடி வருவாய்
டெல்லி: இஸ்ரோவின் செயற்கை கோள்களுக்கான காப்பீடு மூலம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.42 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஜிசாட்-7 மற்றும் இன்சாட்-3டி ஆகிய செயற்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கான பிரீமியம் தொகையாக ரூ.42 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையாக கருதப்படும் மங்கள்யான் செயற்கை கோளை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த செயற்கை கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டு அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறது. இந்த செயற்கை கோளுக்கு காப்பீடு எதுவும் செய்யப்படவில்லை.
உள்நாட்டில் இருந்து ஏவப்படும் செயற்கை கோள்களுக்கு இஸ்ரோ காப்பீடு செய்வதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications