நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்
மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. சீனா இறக்குமதி மாஞ்சா நூலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் மாஞ்சா நூல் விற்பனை மட்டும் பயன்பாட்டுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
காற்றாடிகளை பறக்கவிட கண்ணாடி துகள்களைக் கொண்ட மாஞ்சா நூல் அதிகம் பயன்படுத்துகிறது. இந்த மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்துள்ளது.
மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாஞ்சா நூலுக்கும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அறிக்கை தரவும் மாஞ்சா சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications