ஹைதராபாத்தில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 11 பேரை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்.ஐ.ஏ), அதிகாரிகள் இன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். வெடிபொருட்கள், துப்பாக்கி, ரூ.15 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் கைதானவர்களுக்கு தொடர்புள்ளதாக உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.

NIA busts ISIS module in Hyderabad- 11 arrested, explosives, Rs 15 lakh cash seized

ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நாச வேலைகளில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதை பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே தடுத்துள்ளனர்.

5 மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.

ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+