புல்வாமா தாக்குதல்:13500 பக்க என்ஐஏ சார்ஜ் ஷீட் தாக்கல்-மசூத் அசார் உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு
ஜம்மு: 40 ராணுவ வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட 17 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். படையினர் சென்ற வாகன தொடரணி மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தேசத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

13,500 பக்கம் குற்றப்பத்திரிகை
13,500 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார்தான் முதன்மை குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மசூத் அசாருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் மசூத் அசாரின் சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர், அம்மார் அல்வி, உறவினர் உமர் பரூக் ஆகியோரும் அடங்குவர்.

யார் இந்த உமர் பரூக்?
இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் உறவினரான உமர் பரூக், இந்திய விமானத்தை கந்தகாருக்கு கடத்திய பயங்கரவாதி இப்ராஹிம் ஆதரின் மகன். இந்தியாவுக்குள் ஊடுருவி புல்வாமா தாக்குதலை செயல்படுத்தியது உமர் பரூக்தான். காஷ்மீரில் 2019 மார்ச் மாதம் நடந்த மோதல் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் உமர் பரூக் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாதிகள் படங்கள்
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், மசூத் அசார் உள்ளிட்டோருடன் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியது, சமூக வலைதளங்களில் மேற்கொண்ட உரையாடல்கள் ஆகியவையும் சாட்சியங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளான உமர் பரூக், சமீர் அஹமத் மற்றும் அதில் அகஹமது தார் ஆகியோரது படங்களையும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. இணைத்திருக்கிறது.

என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இவர்களில் அதில் அகஹமது தார், வெடிகுண்டு நிரம்பிய காரை பாதுகாப்பு படையினர் வாகனம் மீது மோதிய தற்கொலைப்படை தீவிரவாதி. மேலும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 17 தீவிரவாதிகளில் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உமர் பரூக், முகமது கம்ரான் அலி, யாசிர் ஆகிய 3 பேர் பாகிஸ்தானியர்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications