பெண் துறவி சாத்வி பிரக்யா மீதான கொலை வழக்கைக் கைவிடுகிறது என்ஐஏ

இந்த வழக்கில் தவறானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சுனில் ஜோஷி. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலை வழக்கில் பிரக்யா சிங் உள்ளிட்டோரை முதலில் என்ஐஏ சேர்த்திருந்தது.
ஆனால் ஜோஷியைக் கொலை செய்ததாக லோகேஷ் சர்மா, ராஜேந்தர் பெஹல்வான் ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சம்ஜாதா ரயில்குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். சுனில் ஜோஷி, சாத்வி பிரக்யாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் ஜோஷி கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது என்ஐஏ.
மேலும் இந்த இருவருக்கும் உதவியதாக திலீப் ஜெகதாப், ஜிதேந்தர் சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் சமீபத்தில்தான் கைதானார்கள்.
இந்தக் கைதைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில்முக்கியக் குற்றவாளிகளும் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக என்ஐஏ அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் பிரக்யாவுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கவும் என்ஐஏ தீ்ர்மானித்துள்ளது.
ஜோஷியும், குண்டுவெடிப்ப வழக்கில் ஒரு முக்கியக் குற்றவாளிதான். அவருக்கும், லோகேஷ் சர்மா, பெஹல்வான் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறும் தனியாக இரு்துள்ளது.
இந்த வழக்கில் பிரக்யா தவிர ஹர்ஷத் சோலங்கி, வாசுதேவ் பார்மர், ஆனந்த் ராஜ் கட்டாரியா, பாஜக கவுன்சிலர் ராம்சரண் படேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க விரைவில் ம.பி. சிறப்பு கோர்ட்டில் மனு செய்கிறது என்ஐஏ.
பிரக்யா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பார்மர்,கட்டாரியா இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். சோலங்கி வேறு சில வழக்குகளில் சிக்கி சிறையில்தான் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications