காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டி: நிலகேணி அறிவிப்பு
பெங்களூர்: காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஆதார் நாயகன் நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர் என்று கூட இன்போசிஸ் இணை நிறுவனரும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் நிறுவன தலைவருமான நிலகேணி கூறப்பட்டார்.

ஆனால் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினரோ அதுபற்றி வாய்திறக்காமல் இருந்தனர். கடந்த மாதம் கூட காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரை நிலகேணி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிலகேணி, காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக நந்தன் நிலகேணி, தாம் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் அனேகமாக பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் வாய்ப்பு இருக்கிறது என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications