பெங்களூர் மருத்துவமனை துப்பாக்கிச்சூடு: 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய விசாரணைக் கைதி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வன்முறைக்கு பெயர் போனவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி விஸ்வநாத்(22) மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். போலீசார் அவரை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் போலீசார் அவரை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மதியம் 3.45 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி தனது கைவிலங்கை கழற்றுமாறு தெரிவித்துள்ளார். உடனே ஒரு போலீஸ்காரரும் விலங்கை கழற்றிவிட்டுள்ளார். கழிவறையில் இருந்து திரும்பி வந்த அவர் போலீஸ்காரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமான தரை மற்றும் மேற்கூரையை நோக்கி சுட்டுள்ளார். மேலும் அவர் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள் இருந்த அறைக்குள் சென்று தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து ஒரு போலீஸ்காரர் அவரை அந்த அறையில் வைத்து பூட்டினார். இல்லை என்றால் விஸ்வநாத் இருந்த வேகத்திற்கு பல உயிர்கள் பலியாகியிருக்கக்கூடும்.
கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வன்முறையில் ஈடுபடுவதற்கு பெயர் போன ஒருவரின் கை விலங்கை கழற்றிவிட்டுள்ளனர். அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வன்முறைக்கு பெயர் போன ஒருவர் இருக்கும் இடத்தில் ஆயுதங்கள் இருந்த அறையை திறந்து வைத்தது போலீசாரின் தவறு என்று கூறப்படுகிறது.
முன்னதாக விஸ்வநாத் கோபத்தில் தனது வீட்டிற்கு வெளியே நின்ற பைக்கை தீ வைத்து எரித்ததால் தான் கைது செய்யப்பட்டார். குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த அறையை பூட்டி வைக்காதது முதல் தவறு ஆகும். விஸ்வநாத்தின் குணம் தெரிந்தும் அவரின் கைவிலங்கை கழற்றிவிட்டது அடுத்த தவறு. துப்பாக்கிகள் இருந்த அறைக்குள் விஸ்வநாத் நுழைந்ததும் அந்த அறைக் கதவை பூட்டிய போலீஸ்காரரின் செயல் பாராட்டுக்குரியது.
எவ்வளவோ பேசிப் பார்த்தும் கேட்காமல் விஸ்வநாத் அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டதால் கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விஸ்வநாத் இருந்த அறைக்குள் நுழைந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணிநேரம் மருத்துவமனை வளாகம் பதட்டமாக காணப்பட்டது.
விஸ்வநாத் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications