For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது.

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. சீராய்வு மனுக்களை இந்த அரசியல் சாசன பெஞ்ச் நாளை முதல் விசாரிக்க உள்ளது.

Nine Judges SC bench to hear Sabarimalai case from tomorrow

இதர வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் மீதும் நாளை முதல் விசாரணை நடைபெறும். இம்மனுக்கள் மீது நாளை முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும்.

மனுதாரர்கள் சார்பாக ஒரு மூத்த வழக்கறிஞர் மட்டுமே வாதிட அனுமதிக்கப்படும் என்று தலைமை நீதிபதி போப்டே ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A nine-judge Constitution bench of Supreme Court will hear the Sabarimalai case from tomorrow (Feb.3).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X