ஆட்டிப் படைக்கும் நிபா வைரஸ்.. டாக்டர்கள், நர்சுகளை கூட லீவில் போகச்சொன்ன கேரள அதிகாரிகள்
நிபா வைரஸ் அச்சம் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்களை விடுப்பில் போகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் அச்சம் காரணமாக பலாச்சேரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களை விடுப்பில் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளத்தில் வேகமாக பரவி வருகிறது நிபா வைரஸ். இந்த வைரஸ் வௌவாலில் இருந்து பரவுகிறது. அந்த உயிரினம் உட்கார்த பழத்தை மனிதர்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் காய்ச்சலால் கேரளத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலாச்சேரி மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு அம்சங்களுக்காக நிபா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் 4 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை விடுப்பில் செல்லுமாறு மூத்த சுகாதார துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இவர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிபா வைரஸ் குறித்து மாவட்டத்தில் உள்ள நிலை குறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் யூவி ஜோஸ் கேரளா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். அந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வரும் ஜூன் 5-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications