வந்து விட்டது பெண்களுக்கான துப்பாக்கி.. அத்துமீறினால் இனி டுமீல் டுமீல்தான்!
லக்னோ: பெண்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அறிமுகமாகியுள்ளது. இந்தத் துப்பாக்கி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இளம் பாரா மெடிக்கல் மாணவி கொடூரமாக பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில்தான் இந்தத் துப்பாக்கியை கான்பூரைச் சேர்ந்த இந்திய ஆயுத தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. இந்தத் துப்பாக்கிக்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.

.32 ரிவால்வர்
இது .32 போர் இலகு ரக ரிவால்வர் ஆகும். இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பெண்களுக்காகவே இதை தயாரித்துள்ளனர். இந்தியாவின் முதல் பெண்களுக்கான துப்பாக்கியாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

அரை கிலோ எடை
இதன் எடை அரை கிலோதான். டைட்டானியம் அல்லாய் மெட்டலில் தயாரிக்கப்பட்டது இது.

விலைதான் அதிகம்
இதன் விலைதான் அதிகமாக இருக்கிறது. அதாவது ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 360 ஆகும். ஜனவரி 6ம் தேதி இது அறிமுகம் செய்யப்பட்டது.

20 புக்கிங்... 80 விசாரிப்புகள்
இந்தத் துப்பாக்கியைக் கேட்டு இதுவரை 20 புக்கிங் ஆகியுள்ளனவாம். 80 பேர் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளனராம்.

பெண்களிடம் அதிக ஆர்வம்
துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ள பெண்கள் இந்த ரிவால்வரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். துப்பாக்கியை வாங்குவது தொடர்பான விசாரணைகளையும் கூட அதிக அளவில் பெண்கள்தான் செய்கின்றனராம்.

சின்னஞ்சிறிய துப்பாக்கி
இந்தியாவிலேயே இதுதான் மிகவும் சிறிய துப்பாக்கியாம். கொண்டு செல்வதும் எளிதாக இருக்குமாம். பர்ஸ் அல்லது கைப்பையில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆறு ரவுண்டு சுடலாம்
இந்தத் துப்பாக்கியில் 6 தோட்டாக்களை நிரப்பி ஆறுமுறை ரவுண்டு வரை சுடலாம். பின்னர் மறுபடியும் தோட்டாக்களை லோட் செய்துகொள்ள வேண்டும்.

அத்தனை பெண்களும் வாங்குவார்களா...
இருப்பினும் இந்தத் துப்பாக்கியை அத்தனை பெண்களும் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. மனோ திடம், துணிச்சல் அதிகம் உள்ள பெண்கள்தான் இதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்களே ஜாக்கிரதை.. இனிமேல் வாலாட்டினால் பெண்கள் குறி பார்த்து சுடும் அபாயம் வந்து விட்டது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications