வந்து விட்டது பெண்களுக்கான துப்பாக்கி.. அத்துமீறினால் இனி டுமீல் டுமீல்தான்!
லக்னோ: பெண்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அறிமுகமாகியுள்ளது. இந்தத் துப்பாக்கி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இளம் பாரா மெடிக்கல் மாணவி கொடூரமாக பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில்தான் இந்தத் துப்பாக்கியை கான்பூரைச் சேர்ந்த இந்திய ஆயுத தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. இந்தத் துப்பாக்கிக்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.

.32 ரிவால்வர்
இது .32 போர் இலகு ரக ரிவால்வர் ஆகும். இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பெண்களுக்காகவே இதை தயாரித்துள்ளனர். இந்தியாவின் முதல் பெண்களுக்கான துப்பாக்கியாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

அரை கிலோ எடை
இதன் எடை அரை கிலோதான். டைட்டானியம் அல்லாய் மெட்டலில் தயாரிக்கப்பட்டது இது.

விலைதான் அதிகம்
இதன் விலைதான் அதிகமாக இருக்கிறது. அதாவது ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 360 ஆகும். ஜனவரி 6ம் தேதி இது அறிமுகம் செய்யப்பட்டது.

20 புக்கிங்... 80 விசாரிப்புகள்
இந்தத் துப்பாக்கியைக் கேட்டு இதுவரை 20 புக்கிங் ஆகியுள்ளனவாம். 80 பேர் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளனராம்.

பெண்களிடம் அதிக ஆர்வம்
துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ள பெண்கள் இந்த ரிவால்வரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். துப்பாக்கியை வாங்குவது தொடர்பான விசாரணைகளையும் கூட அதிக அளவில் பெண்கள்தான் செய்கின்றனராம்.

சின்னஞ்சிறிய துப்பாக்கி
இந்தியாவிலேயே இதுதான் மிகவும் சிறிய துப்பாக்கியாம். கொண்டு செல்வதும் எளிதாக இருக்குமாம். பர்ஸ் அல்லது கைப்பையில் வைத்துக் கொள்ள முடியும்.

ஆறு ரவுண்டு சுடலாம்
இந்தத் துப்பாக்கியில் 6 தோட்டாக்களை நிரப்பி ஆறுமுறை ரவுண்டு வரை சுடலாம். பின்னர் மறுபடியும் தோட்டாக்களை லோட் செய்துகொள்ள வேண்டும்.

அத்தனை பெண்களும் வாங்குவார்களா...
இருப்பினும் இந்தத் துப்பாக்கியை அத்தனை பெண்களும் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. மனோ திடம், துணிச்சல் அதிகம் உள்ள பெண்கள்தான் இதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்களே ஜாக்கிரதை.. இனிமேல் வாலாட்டினால் பெண்கள் குறி பார்த்து சுடும் அபாயம் வந்து விட்டது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications